diff --git a/Jegathambal_Selvarajah_Memoria.html b/Jegathambal_Selvarajah_Memoria.html index 2fc384e..10714f7 100644 --- a/Jegathambal_Selvarajah_Memoria.html +++ b/Jegathambal_Selvarajah_Memoria.html @@ -2529,6 +2529,71 @@
அன்பு மறவா நண்பி
+Amie inoubliable
+An unforgettable friend
+
+ முன்னாள் பீடாதிபதி, கலை கலாச்சார பீடம்
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை
+ Ancienne doyenne, Faculté des Arts et de la Culture
Université de l'Est, Sri Lanka
+ Former Dean, Faculty of Arts & Culture
Eastern University, Sri Lanka
+
மறைவு துயரமானது. ஆனால் நினைவு அழியாதது
+"குடும்பை தனித் தொழியப் புட்பறந்தற்றோ
உடம்போடு உயிரிடை நட்பு".
பருவம் வந்தும் முட்டைக்கோது தனியே கிடக்க அதுள் இருந்து பறவை பறந்து போவதைப் போன்றதே உயிருக்கும் உடலுக்கும் உள்ள நட்பு – என்று கூறும் வள்ளுவர் வாக்கையே உலகு தோன்றிய காலம் முதல் அனைத்து உயிரினங்களும் அனுபவித்துக் கொண்டு வருகின்றன. ஆயினும் நினைவுகள் மறக்கப்படுவது என்பது மிகவும் கடினமான ஒன்று.
+அன்பை மட்டுமே காட்டத் தெரிந்த பாசமுள்ள நண்பியே! நீ சொந்தங்கள் பந்தங்களை விட்டு திடீரென்று மறைந்த செய்தி எங்கள் உள்ளங்களில் சொல்ல முடியாத சோகத்தை நிறைத்துவிட்டதே. இறைபதம் சேர்ந்த எனது அன்பு நண்பி ஜெகா பாசமுடனும், பண்புடனும், அன்புடனும், உள்ளம் நிறைந்த உண்மையுடனும், நட்புறவுடன் பழகுபவராகவும், உதவி வேண்டுவோருக்கு இயன்ற உதவிகள் புரிபவராகவும், மிகவும் மென்மையான சுபாவம் உள்ளவராகவும் இருந்தை அவருடன் பழகிய காலத்திலிருந்து என்னால் உணர முடிந்தது.
+எமது பாசப் பிணைப்பு 1972ம் ஆண்டு இலங்கைக் குடியரசு தினத்தன்று பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சங்கமித்தா விடுதியில் ஆரம்பமானது. அன்று ஆரம்பமான பிணைப்பு ஒரே இடத்தில் 1976 வரை ஒன்றாக இருக்கக் கிடைத்தது. இங்கு 12 மாணவிகள் ஒன்று சேர்ந்து தோழிகளானோம். ஆடிப்பாடி உல்லாசமாகக் காலத்தைக் கடத்தினோம். கொய்யாமர கொப்புகளில் ஏறி கொய்யாக்காய் பிடுங்குவது, மதியச் சாப்பாடு பிடிக்காவிட்டால் கண்டிக்குப் போய் குறைந்த செலவில் ஹோட்டலில் சாப்பிடுவது, Hostel இல் இருந்து வசந்தமாளிகை படம் பார்க்க காலையில் கண்டிக்குச் சென்று Ticket கிடைக்காததால் இரவு வரை காத்திருந்து படம் பார்த்து விட்டு விடுதிக்குத் திரும்பி வந்து விடுதி அனுமதி இல்லாமல் உள்ளே போக முடியாமல் தடுமாறியது, சிவனொளிபாத மலையேறி பட்ட சிரமங்கள், சுற்றுலாக்களின் போது செய்த குறும்புகள் — இவற்றையெல்லாம் மீட்டுப் பார்க்கின்றேன். பசுமை நிறைந்த நினைவுகளோடு பாடித்திரிந்த பறவைகளாக வாழ்ந்தோம். பட்டப்படிப்பு முடித்த பின்னர் ஜெகாவும் நானும் உதவி விரிவுரையாளர்களாக 2 வருடங்கள் கடமையாற்றும் பாக்கியம் கிடைத்தது. பின்னர் வேறு வேறு இடங்களுக்குப் பிரிந்து சென்றோம்.
+முத்துப் பல்லழகி ஜெகா புள்ளிவிபரத் திணைக்களத்தில் உயர் பதவி வகித்தபோது தன் சேவையில் கடமை, கண்ணியம், கடப்பாடு போன்றவற்றை முறையாகக் கடைப்பிடித்த காரணத்தினால் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெற்றார். ஜெகா தன் வாழ்க்கையை பிறர் மதிக்கத்தக்க வகையிலும், சமூகத்திற்கு பயன் தரும் வகையிலும் வாழ்ந்து காட்டியவர் என்றால் மிகையாகாது. பள்ளிப் பருவம் தொடக்கம் பல்கலைக்கழகம் வரை தன்னுடைய பேச்சுத் திறமையினால் பதக்கங்கள் பல பெற்று சாதனை படைத்தார்.
+கொழும்பு புள்ளிவிபரத் திணைக்களத்திலிருந்து மட்டக்களப்புக்கு கடமையின் நிமித்தம் வருகை தந்த போது எமது வீட்டிற்கும் வருகை தரத் தவறவில்லை. இவர்களுடைய குடும்பம் (அம்மா, சகோதரிகள்) என்னுடன் தொடர்புகளை கொண்டிருந்ததால் குடும்ப நண்பியாகவே மாறி விட்டோம்.
+திருமணத்தின் பின்னர் நாட்டின் சூழ்நிலை காரணமாக வெளிநாடு சென்றதால் எமது தொடர்பு சற்றுக் குறைந்திருந்தாலும் அண்மைக் காலமாக ஒவ்வொரு நாளும் காலையில் WhatsApp மூலம் ஆழமான கருத்துக்கள் பொதிந்த good morning, இரவில் மொபைல் ஃபோனில் நீண்ட நேர உரையாடல் சுகவீனமுற்ற பின்பும் தொடர்ந்தது. கடைசியாக அவர் வைத்தியசாலையில் இருந்த போது இரண்டு முறை மொபைல் ஃபோனில் தொடர்பு கொண்டார். ஒருமுறை video call எடுத்தார். மனம் விட்டு பலவையும் பத்தையும் மனம் விட்டுக் கதைத்தார். இந்த சந்தர்ப்பங்களை என்னால் மறக்கவே முடியுதில்லை. இவ்வுரையாடலை ஏற்படுத்தித் தந்த இறைவனுக்கு நன்றி.
+நல்ல பண்புடைய ஒருவருக்கு நல்ல மனமுடைய ஒருவர் கிடைப்பார். அந்த நல்ல மனமுடைய திருமிகு செல்வராசா அவர்கள் கணவராக வாய்த்து சிறப்பான வாழ்க்கை வாழ்ந்தனர்.
+"பெறுமவற்றுள் யாமறிவதில்லை அறிவறிந்த
மக்கட் பேறல்ல பிற".
அறிவில் சிறந்த நன்மக்களை விட இல் வாழ்க்கையில் சிறந்த பேறு எதுவும் இல்லை. இவ்வாறான நற் பெயர்களைப் பெற்று பெருமை பூத்த பெருமகள் நண்பி ஜெகா. இவரது மகள்மார்களான அஸ்வினி, சிவாஜினி இதற்கு எடுத்துக்காட்டு.
+"நல்லவர்களுக்கு மரணமில்லை". அவர்களின் இயற்கை மரணம் தான் அவர் பிறந்த தினம் — வயது எல்லையே இல்லை. அவர்கள் என்றும் சிரஞ்சீவிகளாக வாழ்ந்து வழி காட்டியாக இருப்பார்கள்.
+மரணத்தால் மனிதன் மடிந்து போவதில்லை. அவரது உயர்ந்த குணங்களால் அவர் வாழ்ந்து கொண்டிருப்பார். நண்பி ஜெகாவும் எம்மோடு எப்போதும் வாழ்ந்து கொண்டே இருப்பார்.
+அமரர் ஜெகா அவர்களின் கணவருக்கும், பிள்ளைகளுக்கும் குடும்பத்தினருக்கும் நல்ல மன பலத்தைக் கொடுத்து தொடர்ந்து வாழ்க்கையில் முன்னேற இறையருள் புரிய வேண்டுமென பிரார்த்திக்கின்றேன். ஓம் சாந்தி சாந்தி சாந்தி.
+"வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்".
மறைவு துயரமானது. ஆனால் நினைவு அழியாதது. என்றென்றும் உங்கள் நினைவுகள் எங்களோடு தொடர்ந்து வரும். எங்கள் நினைவுகளில் என்றும் நீங்காது நிறைந்து நிற்பீர்கள்.
+ +
+ அன்பு மறவா நண்பி
+ கலாநிதி சிவக்கொழுந்து பொன்னையா
+ முன்னாள் பீடாதிபதி, கலை கலாச்சார பீடம்
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை
+